ஆதி முதல் எலி தவிர வேறெதுவும் எண்ணமில்லை சாதி இல்லை சண்டை இல்லை பிறன் குடியை கெடுத்ததில்லை உணவு தரும் திருப்தி இன்றி வேறெதுவும் உலகில் தாரா பிணவு இல்லை எங்களுக்கு என்பதெங்கள் முதல் பாடம். காணி நிலம் வேண்டுமென்ற கங்கணங்கள் இருந்ததில்லை நாணி கோனி நா குழற பேச நாங்கள் அறிந்ததில்லை உணவு மட்டும் போதும் என்றே வாழ கற்று வந்த நாங்கள் கனவு இல்லா வாழ்கை வாழ சொல்லும் இரண்டாம் பாடம். |